செவ்வாய், ஜூன் 24, 2014

தியேட்டர் எஃபெக்ட்ஸ் பார்ட் – II





கல்யாணம் நிச்சயமாகி இருந்த போது, என் அக்கா (பெரியப்பா பெண்) “சினேகிதியே படம் போகணும் துணைக்கு வரியாடீ?”ன்னு கேட்டா, இந்த விஷயத்துல எல்லாம் யாருக்கும் நான் இல்லன்னே சொல்லமாட்டேன். சரின்னுட்டேன். அக்கா சொன்னா, “நான் டிக்கெட் வாங்கிண்டு உதயம் தியேட்டர்ல வெயிட் பண்ணறேன், நீ வந்துடு.” நானும் சரின்னுட்டேன். இப்போ ஆபீஸ்ல என்ன பொய் சொல்லறது? 

ஒரு ஐடியா வந்துது. எங்க பாஸ் கிட்ட் போயி, ”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏதோ கல்யாண விஷயமா பேச வராங்களாம் அப்படியே என்னையும் பார்க்கணும்ன்னு பிரியப்படறாங்களாம்”,ன்னு ஒரு டூப் உட்டுட்டு கிளம்பி படத்துக்கு போயிட்டேன். என் போறாத நேரம் அப்போதைய என் காதலர், அதான் எங்க தலைவர் ஆபீஸுக்கு என்ன தேடிண்டு போயி நின்னிருக்கார்

எங்க பாஸ் வெள்ளந்தியா,”உங்க அம்மா,அக்கால்லாம் வீட்டுக்கு வராங்கன்னு மேடம் அப்பவே கிளம்பிட்டாங்களேன்னு சொல்ல தலைவருக்கு செம பல்பு.

கல்யாணத்துக்கப்புறம் கைதியாகி வீட்டு சிறையிலேயே கொஞ்ச வருஷம் போனதுக்கப்புறம் நான் ரொம்ப கெஞ்சி கேட்டு, யாருக்கும் தெரியாம ரொம்ப ப்ளான் பண்ணி, ஒருவெட்டிங் டேக்குசண்டை கோழிபடத்துக்கு போக டிக்கெட் வாங்கினோம். அதுவும் அந்த படத்துல வர, ”தாவணி போட்ட தீபாவளி…” பாட்டு அப்போ குட்டிபாப்பாவா இருந்த என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் அந்த படத்துக்கு கூட்டிட்டு போகவே தலைவர் சம்மதிச்சார்.

இந்த விஷயத்தை நான் பெருமையா என் பொறந்த வீட்டுல சொல்ல அவ்வளவு தான். நாங்க பைக்ல தியேட்டருக்கு கிளம்பினதுலர்ந்து ஒவ்வொரு பத்தடிக்கும் யாராவது ஒருத்தர் என் அம்மா, மாமா, அத்தை, அக்கா இப்படி ஒவ்வொருத்தரா போன் பண்ண ஆரம்பிச்சாங்க.


மாப்பிள்ளை கல்யாண நாள் வாழ்த்துகள்!”

இவர் உடனே, “ஹிஹிநன்றி!”

அடுத்தது அந்த பக்கத்திலிருந்து,”சினிமாவுக்கு போறீங்களாமே? வாழ்த்துகள்!”

இவர் “!?!?!?”

என் அக்கா ஒருபடி மேலே போய்,”என்ன படம் மாப்பிள்ளை போறீங்க?”

இருந்த கடுப்புல தலைவர் பல்லை கடித்தபடி,”ம்..ம்..சண்டை கோழி. உங்க தங்கச்சிக்கு பொருத்தமான படம்.”

கடுப்பான தலைவர் என்னிடம் சொன்னது,”போற போக்கை பார்த்தா, தியேட்டர்ல விஷாலுக்குக்கூட கட் அவுட் வச்சிருக்காங்களோ இல்லையோமுதல் முதலாக திரைப்படம் பார்க்கவரும் எங்கள் குலவிளக்கே!”ன்னு போட்டு உங்க வீட்டு ஆளுங்க உனக்கு கட் அவுட் வச்சிடுவாங்க போலிருக்கே.”

அந்த படத்தை பார்க்கவிடாமல் என் பொண் அழுததும், சரியாக அந்த பாட்டு வரும் போது தூங்கி போனதும் இங்கே பதிவு செய்தே ஆகவேண்டிய தகவல்கள்.

அதன் பின் பல வருடங்கள் தியேட்டர் பக்கமே போகாமல் இருந்து பயணம்படம் வந்த போது, ராதா மோகன், நாகார்ஜுனா, ப்ரகாஷ்ராஜ் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்போடு போனோம். படத்தில் சீரியஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் எல்லாம் மக்கள் சிரித்தார்கள்.வெறுத்துவிட்டோம்.


அதோடு, தியேட்டர்களில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன் புகை பழக்கத்தின் கேடுகளை விளக்கும் டாக்குமெண்டரி ஒன்று போடுவார்களே? “என் பெயர்….” என்று, அந்த படத்தில் நாளை நாம் வரக்கூடாதென்றால் தியேட்டரில் சினிமா பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அவ்வளவு சிகேரட் நெடி. எதாவது ஒரு சானலில்,”உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக….” என்று போடுவதையே பார்த்துக்கொள்ளலாம். அதுவும் இல்லையென்றால், சினிமா பார்க்கவில்லை என்றாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது.

தியேட்டர் எஃபெக்ட்ஸ் - பார்ட் I



நான் சின்ன குழந்தையா இருக்கிறச்சே என்னை தூக்கிண்டுஅவர்கள்சினிமாவுக்கு போனாங்களாம் எங்க அம்மா, அப்பா. அங்க ஸ்கிரீன்ல வந்தமேரி பிஸ்கெட்அட்வர்டைஸ்மெண்ட பார்த்து,”ஹை ! பிச்சி ! பிச்சி !” ந்னு (பக்கி மாதிரி) கத்தினேனாம். இது தான் என் முதல் தியேட்டர் அனுபவம் பற்றிய பதிவு.

அப்புறம்வறுமையின் நிறம் சிவப்புபார்க்க போயி என் தம்பியும், கசினும் தொலைஞ்சு போயி கிடைச்சது. “துடிக்கும் கரங்கள்பார்க்க போயி என் சின்ன தம்பி விடாம அழுததால பாதியிலேயே திரும்பி வந்தது. இதெல்லாம் நிழலா நியாபகம் இருக்கிற விஷயங்கள்.

முதல் முதலா வந்த 3டி படமானமை டியர் குட்டிச்சாத்தான்பார்க்கறச்சே அந்த கண்ணாடிய கீழ குனிஞ்சு போட்டுண்டுட்டு நிமிரவும். படத்துல மந்திரவாதி ஏதோ ஒரு நெருப்பு சக்கிரம் மாதிரி ஒன்னுத்த விடவும் சரியா இருந்துது. நெருப்பு சக்கிரம் மூஞ்சிகிட்ட வர பயந்து வீல்!”ன்னு கத்தினது இன்னமும் நன்னா ஞாபகம் இருக்கு.

அப்புறம் கமலா தியேட்டர்லதர்ம துரைபடம் பார்க்க நானும், தம்பிகளும், மாமா பசங்களும் போயிட்டு, டிக்கெட் குடுக்க ஆரம்பிக்கறச்சே பணம் போறாதுன்னு தெரிஞ்சு போயி என் மாமா பையன் வீட்டுக்கு பஸ்புடிச்சு போயி பணம் எடுத்துட்டு வந்து டிக்கெட் வாங்கினது. பின்ன, ரஜினி படமாச்சே டிக்கெட் கிடைக்குமா?

ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறச்சே, கூடபடிக்கிற கிராமத்துலர்ந்து வந்த பொண்ணு அவங்க அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னும் அவர் சினிமா பார்க்க விடமாட்டார்ன்னு சொல்லி எப்படியாவது ஒரு சினிமாவுக்கு கூட்டிகிட்டு போகும்படியா கெஞ்சினா. நாம தான் ஊருக்கு உபகாரியாச்சே. எங்க அப்பா கிட்ட சொல்லி பாவம்ன்னு சினிமாவுக்கு அவள கூட்டிண்டு போக பர்மிஷன் வாங்கினேன். குறிப்பிட்ட அந்த நாள் என்னமோ எங்க ஸ்கூலுக்கு மட்டும் லீவா போன ஒரு ஒர்கிங் டே. பார்த்தா காலங்கார்த்தால எட்டு மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்கு வந்து நிக்கறா. ராத்திரியெல்லாம் எக்ஸைட்மெட்ல தூங்கியே இருக்க மாட்டா போலிருக்கு


ஏய் ! எங்க அப்பாகிட்ட உங்க அப்பா எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிட்டதால நான் போயிதான் ஆகணும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கேம்மா. ப்ளீஸ்ப்பா ! சீக்கிரம் போலாம்ப்பா !” என்று கெஞ்சினாள் 
.
சரின்னு கிளம்பினோம். எந்த தியேட்டர்ல காலங்கார்த்தால படம் போடுவாங்க. நான் கொஞ்சம் லேட்டா போகலாம்ன்னு சொன்னாலும் அந்த பொண்ணு கேக்கல. ஒவ்வொரு தியேட்டரா போய் கேவலமாஎப்ப படம் போடுவீங்க?”ன்னு  கேட்டுண்டே போனோம். எனக்கா மகா எரிச்சல். ஆனா, பாவம் அவளுக்கு ஆசை வெட்கம் அறியவில்லை. எதாவது ஒரு படம் பார்த்தே ஆகணும்ன்னு ஒரே அடம். கடைசில, இப்போபத்மராம் கல்யாண மண்டபமாஇருக்கிறராம்தியேட்டர்ல ஒரு ராமராஜன், கௌவுதமி நடிச்ச படம் பார்த்தோம். அதுக்கு தியேட்டர் வாசல்லயே திறக்கரவரைக்கும் காத்திண்டிருந்து முதல் ஆளா டிக்கெட் வாங்கினோம். அந்த தியேட்டர் வாச்மேன் எங்களை ஒரு மாதிரியா பார்த்தான்.

கிரோம்பேட்டையில இருக்கிறச்சே என் மாமா பசங்க வந்தா ஒரு சினிமா கட்டாயம் பார்ப்போம். அப்படி ஒரு தடவை ஒரு அம்பது ரூபாய் நோட்டை எடுத்துண்டு வெற்றி தியேட்டருக்கு போனோம். (அப்போல்லாம் அந்த அம்பது ரூபாய்ல நாங்க அஞ்சு பேரும் படம் பார்க்கலாம்). என் தம்பிகிட்ட தான் பணம் இருந்துது. “போயி டிக்கெட் வாங்குடா!”ன்னாபணத்த காணோம்ங்கிறான். “ஏய் ! சும்மா விளையாடாதடா!”ன்னேன். “இல்லக்கா! நிஜம்மாவே காணோம்!” கொஞ்ச நேர விசாரிப்புகளுக்கு பின் நிஜமாவே பணம் தொலைஞ்சு போச்சுங்கர விவரம் எனக்கு புரிஞ்சிடுத்து. எங்களுக்குள்ள நடக்குற இந்த கான்வர்ஷேஷன்ஸ ஒருத்தன் பார்த்துண்டே இருந்தான். இதை பார்த்தவுடனே அவன் தான் திருடன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.

நேரா பக்கத்துல இருக்கிற கிரோம்பேட் போலீஸ் ஸ்டேஷன் போனோம்.அங்க எங்களோட அம்பது ரூபா காணாம போயிடுத்துன்னு கம்ப்ளைண்ட் பண்ணினோம்.அங்க இருந்த போலீஸ்காரர்,”எங்க வுட்டீங்க பசங்களா? நல்லா தேடிபாருங்கன்னாரு. நாங்க உடனேசார் ! ஒருத்தன் எங்களையே உத்து பார்த்துகிட்டு இருந்தான். அவன் தான் திருடியிருக்கணும். அவன் எங்க கிட்டயிருந்து திருடின பணத்துல படம் பார்க்கிறத்துக்காக தியேட்டர்லயே காத்துகிட்டிருக்கான். வந்து உடனே அரஸ்ட் பண்ணுங்க சார்!”ன்னோமே பார்க்கணும்

சுத்தி இருந்த மத்த போலீஸ்காரங்கள்ளாம் சிரிச்சாலும் அந்த பெரிய போலீஸ் மட்டும்அம்பது ரூபாய்க்க்கல்லாம் அரஸ்ட் பண்ண முடியாது பசங்களா.”ன்னு ஏதோ சமாதானமெல்லாம் சொல்லி திருப்பி அனுப்பிட்டார். வீட்டுக்கு வந்தா, “சினிமா பார்க்க குடுத்த பணத்த தொலைச்சிட்டா வேற பணமெல்லாம் இல்ல. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு ஒக்காந்துண்டு இருங்கோ.”ன்னு அம்மா திட்டிட்டா. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு ஒக்காந்துண்டு இருக்கிறத்துக்கா சம்மர் லீவு விட்டிருக்கு? நாங்க வழக்கம் போல வீட்ட சுத்தி ஓடி மாடி, சுவர், மரம் எல்லாம் ஏறிகுதிச்சு எங்களால முடிஞ்ச அளவுக்கு அக்கம்பக்கத்துல இருக்கற வயசானவாளையெல்லாம் மத்தியானத்துல தூங்கவிடாம நன்னா படுத்தி நாங்க படம் பார்க்க முடியாம போன ஆத்திரத்தை தீர்த்துண்டோம்.

தியேட்டர் எஃபெக்ட்ஸ் தொடரும்……

வியாழன், ஜனவரி 09, 2014

காக்காவான குயில் :(((

காட்சி 1:
 
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று காலை ஒன்பது மணி.



"காற்றுக்கென்ன வேலி......"

"மீரா!"

"கடலுக்கென்ன மூடி.... டிட்ன்க்டிடிங்....."

"மீரா"

"கங்கை வெள்ளம் சங்குக்குளே அடங்கி விடாது, மங்கை நெஞ்சம் பொங்கும் போது..."

"மங்கை நெஞ்சம் பொங்கறது இருக்கட்டும், பால் பொங்கிட போறது கவனி!"

"தெரியும்ப்பா, அடங்க மாட்டீங்க நீங்க? கொஞ்சமாவது பீல் பண்ணி பாட விடறீங்களா...!"

"ஸா..நி...ஸா..ஸரி
ஸரிஸரிஸரிஸாநி...."

"தண்ணி கேன்காரர் வந்தா பணம் குடுத்திடு!"

"ஸா..நி...ஸா..
ஸரிஸரிஸரி....சரிப்பா"

"மீரா"

"ஸ்ஸ்ஸ்....என்னப்பா வேணும் உங்களுக்கு?"

"இல்லப்பா நீ ஜலதோஷத்துலையும், ஜுரத்துலையும் கஷ்ட்டப்படரன்னு எங்க ஆபீஸ்ல டிரைவர்ரா இருக்கானே, அந்த நார்த் இந்தியன் பையன் அவன்கிட்ட சொன்னேன். அவன்தான் இந்த மருந்தை குடுத்தான். "இத மேடத்துக்கு குடுங்க சார், இன்னிக்கே நிவாரணம் கிடைச்சுடும்"ன்னு சொன்னான். ஆயுர்வேதிக்காம், ஒரு நாளைக்கு மூணு வேளை ஹாட் வாட்டர்ல கலந்து குடிக்கணுமாம்.இந்தா"

"சாரிப்பா!"

"எதுக்கு சாரி?"

"இல்ல எப்பவும் போல நீங்க நச்சரதுக்கு தான் கூப்படறேளோன்னு நினைச்சு, எரிஞ்சு விழுந்துட்டேன்."

"சீ..சீ...பரவாயில்லை, மறக்காம மருந்த சாப்பிடு."
                                                            

காட்சி 2: 
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று இரவு ஏழு மணி.



"மீரா.....மீரா!"

"ஏய் ! அம்மா எங்க ?"

கிச்சனுக்கு வந்து,"உடம்பு எப்படிப்பா இருக்கு? மருந்த சாப்பிட்டியா?"

"அடப்பாவி ! ஏதோ ஒரு மருந்தை குடுத்து குயில் மாதிரி இருந்த என் குரலை காக்கா மாதிரி ஆக்கிட்டேன்களே..!"

கத்தினேன், கதறினேன், என்ன புண்ணியம்? என் குரல் எனக்கே கேட்கவில்லை.

என் நிலையை பார்த்து முகம் முழுக்க பூரித்து, அட! அந்த மருந்தை குடுக்கும் போதே டிரைவர் சொன்னான், "இன்னிக்கி ஒரு நாள் இந்த மருந்தை மேடம் சாப்பிட்டால் போதும் சாப், உங்களுக்கு ஒரு வாரத்திற்கு அவங்க பாட்டுலருந்து நிவாரணம் கிடைக்கும்ன்னு, நிஜம் தான். நாளைக்கு அவனுக்கு சரவண பவன்ல லஞ்ச் ஸ்பொன்சர் பண்ணிட வேண்டியதுதான்."

"கிர்கிர்கிர்கிர்கிர்கிர்கிர்.......!"

புதன், டிசம்பர் 25, 2013

எலக்ட்ரானிக் கொலைகள் - சிறுகதை.



ள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்து விழித்துக்கொண்டேன். மீண்டும் அந்த எண்ணம் என்னுள் தலை தூக்கியது. சிறிது காலமாகவே இப்படிதான் இருக்கிறது. பாதி இரவில் கண்விழிப்பதும், கூடவே கொலை செய்யும் எண்ணம் ஏற்படுவதும். சுற்றும்,முற்றும் பார்த்தேன். கண்ணனும் குழந்தைகளும் தூங்கிகொண்டிருந்தார்கள். எப்படி இவர்களால் இப்படி தூங்க முடிகிறதேன்றே தெரியவில்லை.

எனக்கு மட்டும் தான் இந்த மாதிரி தூங்க முடியாமல் இம்சையாய் இருக்கிறது.எல்லோரையும் கொன்று தீர்த்துவிட்டால் நிம்மதி என்று தோன்றுகிறது. 

நாட்டில் இந்த மாதிரி மக்களுக்கு கேடு விளைவிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அவர்களை எல்லாம் களை எடுத்தே ஆகவேண்டும். அதற்காகத்தான் இந்த மாதிரி நவீன கருவிகள் கண்டுபிடிக்க பட்டு இருக்கின்றன. அந்த மாதிரியான எலெக்ட்ரானிக் கருவி ஒன்றை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறேன். 

தினமும் நடுஇரவில் விழிப்பதும் அந்த எலெக்ட்ரானிக் கருவியால் போட்டு தள்ளுவதும் சில நாட்களாக நடக்கிறது. இதனால், இரவிலும் தூக்கமில்லை,பகலில் வீட்டு வேலை,ஆபிஸ் வேலை என்று பகலிலும் தூக்கமில்லை. 

யோசித்துக்கொண்டே அந்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு எழுந்தேன். என்னுடனேயே வெள்ளை நிறத்தில் இன்னொரு உருவமும் எழுந்தது. அதிர்ச்சி ஒரு நொடி உடம்பை உலுக்கியது. உற்றுப்பார்த்தேன். 

“ஆ! இது என்ன?”

அந்த வெள்ளை உருவம் என்னைபோலவே இருந்தது.

“யா..யா..யார்..நீ?” நான் கேட்டதாக நினைத்துகொண்டிருந்தேன். ஆனால், என் வாயில் இருந்து வார்த்தைகளே வரவில்லை.

அது சிரித்தது. என் கேள்வியை மனத்தினுள் புகுந்து படித்தது போல், “நாந்தான் உன் மனசாட்சி. நீ சினிமாவில் எல்லாம் பார்த்ததில்லை? ஒருத்தர் தன் மனசாட்சியோடு பேசிக்கொள்வதை...?”

“ஓ...!” இப்போ கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது.

“என்ன செய்யப்போற?” அதட்டலான குரலில் கேட்டது.

“கொக்....கொ...கொலைகள்.”

“என்ன துணிச்சல்!? அதை கொஞ்சங்கூட தயக்கமே இல்லாம சொல்றியே!?”

“இதில் என்ன தயக்கம்!? மக்களுக்கு தீங்கு செய்பவர்களை, போட்டு தள்ள வேண்டியது தான்.”

“அது அரசாங்கத்தோட வேலை, நீயேன் தினமும் பாதிராத்திரியில் எழுந்துண்டு இப்படி செய்யற?”

“எல்லாரும் அரசாங்கத்தையே எதிர்ப்பார்த்திருக்க கூடாது.அது மட்டுமில்ல நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்.”

“என்ன? வசனம் பேசறியா? செய்யறது கொலைகள் அதுக்கு என்ன உனக்கு திமிர் பேச்சு வேண்டிகிடக்கு?”

“இது தப்புன்னா, இந்தமாதிரி செய்யறதுக்குன்னு  எலெக்ட்ரானிக் கருவியெல்லாம் தயாரிச்சு விக்கறாங்களே, அதுக்கு என்ன சொல்லற?”

“முட்டாள் ! உன்ன நீ காப்பாத்திக்கலாம், ஆனா இன்னொரு உயிர கொல்ல உனக்கு உரிமை கிடையாது.”

“எத்தனை பேர இவங்க கொன்னிருக்காங்க தெரியுமா? அதுல எத்தனை குழந்தைகள் தெரியுமா? இவங்களையெல்லாம் விட்டுவைக்கக்கூடாது.”

“சரி, உன் ஒருத்தியால இவங்க எல்லாரையும் ஒழிச்சிட முடியுமா?”

“வா...வா...வந்தியா இந்த கேள்விக்கு, என்னடா இன்னமும் இந்த கோழைத்தனமான கேள்வி வரலியேன்னு பாத்தேன்.வெக்கமா இல்ல இப்படி கேட்கறதுக்கு உனக்கு? எல்லோரும் நம்ம மட்டுமே செஞ்சு ஒரு வேலை ஆகிடும்ன்னு நினைச்சா ஆரம்பிக்கிறாங்க? என்வரையில் என்னால ஆனத நான் செய்யறேன்.எல்லோரும் சேர்ந்து செஞ்சா ஒருநாள் இவங்களை மொத்தமா ஒழிச்சிடலாம்.”

“சரி, இவ்வளவு நாளா செய்யறியே உன்னால அவங்களை ஒழிக்க முடிஞ்சுதா? என்னைக்குமே ஒரு பிரச்சனையோட ஊற்றுக்கண் எங்க இருக்குன்னு பார்த்து அதை தான் அழிக்கணும். அப்பத்தான் அது திரும்பத்திரும்ப வராம இருக்கும்.”

“இப்போ தான் என்னமோ பெரிய மகாத்மா மாதிரி கொலை செய்யறது தப்புன்னு கிளாஸ் எடுத்த? திடீர்ன்னு மொத்தமா அழிக்கறதுக்கு வழி சொல்லற?”

"அழிக்கிறதுக்கு இல்ல, உருவாகாமலே இருக்கிறதுக்கு வழி சொல்லறேன்."

"இப்போ சொல்லு திருப்பியும் கேட்கிறேன், உன்னோட செயலால அவங்க எல்லோரையும் மொத்தமா ஒழிச்சிட முடியும்ன்னு நீ நினைக்கிறியா? இன்னமும் எத்தனை நாளைக்கு இப்படி தூக்கத்தை தொலைத்து விட்டு தவிக்கப்போற?”

நான் யோசிக்க தொடங்கினேன்.
நான் யோசித்து கொண்டிருக்கும் போதே அது ச்சேச்சே அவள் சொன்னாள்,”வீட்டோட சுற்றுப்புறத்தை தூய்மையா வச்சிக்கணும், தண்ணிய தேங்க விடக்கூடாது, குப்பையை உடனே,உடனே டிஸ்போஸ் பண்ணிடனும். இதெல்லாம் செஞ்சியானா இந்த கொசுக்கள் பரவாது. நீயும் ராத்திரி முழுக்க கொசு பேட்டை வச்சிண்டு அடிச்சிண்டே இருக்கவேண்டிய அவசியமும் இருக்காது.புரிஞ்சுதா?”

“புரிஞ்சுது” என்றேன் மெல்ல புன்னகைத்தப்படி.

“என்ன புரிஞ்சுது?”

“நீ ஒரு புத்திசாலியோட மனசாட்சின்னு.”

இப்போது அவளும் புன்னகைத்தாள்.என் மனசாட்சி விழித்த வேளையில் நானும், கொசு பேட்டும் தூங்க தொடங்கினோம்.

வியாழன், அக்டோபர் 24, 2013

வோய் திஸ் மச் நாய்ஸ் கேர்ள்ஸ்...!?

இன்னிக்கு இதுங்களை ஸ்கூல்க்கு கொண்டுவிடும் பணி என்னிடம் வந்துவிட்டது. மாடியில் இருந்து இறங்கும்போதே கிழே காத்திருந்தது அது. "ஹாய் வோயட்டி !" என்றபடியே இறங்கினார்கள். அதுவும் இவர்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி வால் வாசல் கதவில் "டப், டப் " என்று அடித்து சத்தம் கேட்கும் படி வேகமாக ஆட்டியது.

"அக்காவோடல்லாம் ஸ்கூல்லுக்கு வரியாடா ?"

"ரொம்ப முக்கியம் நாய்க்கு படிப்பு." (மனதிற்குள் நொந்து கொண்டேன்.)

ொஞ்ச ஆரம்பித்தார்கள். அதுவும் தன் பெரிய உடம்பை ஆட்டி விளையாடியது. வெள்ளையாய்,பெரிசாய் இருப்பதால் "ஐராவதம்" என்று பேர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

"சரி,சரி, வாங்கோ, டைம் ஆச்சு !"

வீட்டு கேட்டை தாண்டினோம். வெள்ளையும்,பழுப்புமாய் ஒன்று தெருவில் வந்து கொண்டிருந்தது.

"அம்மா ! இது எங்க பிரெண்டும்மா !"

"அது சரி, வோயட்டி தம்பி, இது பிரெண்ட்டா?" (மனசுக்குள்ளயே)

அடுத்து அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

"போடி என்ன இருந்தாலும் "குட்டு (goodu)" தான் ரொம்ப சமத்து என்மேல ரெண்டு காலையும் போட்டுண்டு எப்படி ஏறி நிப்பான் தெரியுமா?"

"இல்ல "மிஸ்க்கு (mishkku)" தான் சமத்து நம்ம பர்மிஷன் இல்லாம நக்கவே நக்காது."

"goodu, புசு,புசு ன்னு சிங்க குட்டி மாதிரி இருக்கான் பார்த்தியா."

"ஏன் mishkku வும் தான்."

ரெண்டும் தெரு முனையில் இருக்கும் வீட்டில் இருக்கும் ரெண்டு கோல்டன் ரெட்ரிவர் வகை நாய்கள்.

"ரெக்ஸ் அன்னிக்கு என்ன பார்த்து எப்படி வாலாட்டினான் தெரியுமாம்மா!?"

"எனக்கிட்ட வாலாட்டி இருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் அதுக்கு." (கறுவிக்கொண்டேன், இதுவும் மனசுக்குள்ளயே தான்)

தெருமுனை தாண்டினோம். ஒரு வீட்டில் இருந்து "குக்வக்,குக்வக்" என்று ஒரு பொமரேனியன் செல்லமாக கத்தியது.

"அம்மா, அதுதாம்மா "லக்கி" ரொம்ப சமத்து எங்க பிரெண்ட்."

அடுத்ததாக எதாவது ஒரு பக்கியை அறிமுகபடுத்துவார்களோ என்று பயமாக இருந்தது.

ஒருவழியாய் ஸ்கூலில் விட்டு விட்டு வந்து தலைவரிடம் கேட்டேன் "ஏம்ப்பா, நம்ம பொண்ணுங்களுக்கு யாரும் மனுஷ பிரெண்ட்ஸ்யே இல்லியோ...!?"

புதன், அக்டோபர் 23, 2013

வைகுண்ட வாசம்

 "வைகுண்ட வாசம்", யாருக்கு கிடைக்கும்? யாரு நிறைய புண்ணியம் பண்ணி இருக்காளோ அவாளுக்குத்தான் கிடைக்கும்ன்னு சொல்லுவா. வைகுண்டத்துக்கு போனவாளுக்கு மறு பிறவியே கிடையாதாம். பகவானோடையே வைகுண்டதுலையே இருப்பாளாம்.ஆனா, வைகுண்டத்துல ஆறுமாசம் வாழ்ந்துட்டு திரும்பி நரகத்துக்கு வந்தவர்களை  பற்றி நீங்க கேள்வி பட்டிருக்கிறீர்களா...? நாந்தான் அது (ஐய்....! சுத்தமா மர கழண்டுடுத்து போலிருக்கே !).

"முன்னம் அவன் நாமம் கேட்டாள்" ன்னு ஆரம்பிக்கற "சிவகாமியின் சபதம்" நாவலோட ஹை லைட் அப்பர் தேவார பாடல்ல வருமே ஒரு எடத்துல "பின்னர் அவன் ஆரூர் கேட்டாள்" ன்னு. அந்த மாதிரி எனக்கு என்னவோ ஸ்ரீரங்கத்து மேல ரொம்ப ஈர்ப்பு. (ஓ...! உன்னபத்தி உனக்கு அப்படியெல்லாம் வேற ஒரு நினைப்பா..!)

திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் ன்ன உடனேயே தலைவர் கிட்ட ஸ்ரீரங்கத்துல வீடு பாருங்கோன்னு சொல்லிட்டேன். அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கும், சுத்தி இருக்கிறவா எப்படி இருப்பா, அங்க வீடு கிடைக்குமா, இப்படி எதை பத்தியுமே யோசிக்காம சொன்னேன். தலைவரும் அப்பல்லாம் "மனைவி சொல் மிக்க மந்திரமில்லை" ன்னு தான் இருந்தார். (கல்யாணமான புதுசு இல்லியா,அதான்...!) (நீ போன பின்னாடி அங்க இருக்கிறவா எப்படி இருந்தா?, ஓடி இருப்பாளே!)

 ஆனா பகவானும் நான் கொஞ்சகாலம் வைகுண்டதுல இருக்கணும்னு விதிச்சிருந்திருக்கார். ஸ்ரீரங்கத்துல, அம்மா மண்டபம் ரோட்ல, அம்மா மண்டபத்துக்கு கிட்டகையே ஒரு பிளாட்ல வீடு கிடைச்சுது. ஒரு நண்பர் சொல்லிவச்சு, நாங்க தான் வரணும்ன்னு நிறைய பிரயத்தனம் பண்ணி தான் அந்த வீடு கிடைச்சது. (நம்பிட்டோம் !)

நாங்க குடி போனது ஒரு ஆனி மாச கடைசி நாள். மறுநாளில் இருந்து ஆடி மாதமும்,அதோடே பண்டிகைகளும் தொடக்கம், ஆடி முதல் தை வரை எல்லா பண்டிகைகளையும் ஒரு தடவை கொண்டாடிட்டு திருப்பியும் இந்த சென்னை நரகத்துக்கே சாரி நகரத்துக்கே வந்தாச்சு. (நீ வந்த பின்னாடி தான் அது நரகமாகிட்டதா நிறையப்பேர் பேசிக்கறா..!)

தொடரும்...

பின் குறிப்பு : வாசகர்களுக்கு சிரமம் தரக்கூடாதென்பதர்க்காக அவர்களின் விமர்சனங்களும் அடைப்புகளுக்குள் முன்கூட்டியே தரப்பட்டிருக்கின்றன.


 

சனி, அக்டோபர் 05, 2013

MY FIRST GUEST FOR NAVARATHIRI

Long live Blogger ! Blogger editor is not providing  me with tamil fonts. So, with lots and lots of hesitation I am giving my first english post.  I am forced to write in English.  Here is the lady who comes to my home as the very first person in navarathiri every year. I am glad to inform you all that, this decoration I found all by myself. Many others may also have created this or ever much better than this. If so, kindly let me know through your comments. I can learn the other methods also.


May Matha Bhuvaneshwari shower her immense grace on all of us.


VILAKKU NACHIYAR