காட்சி 1:
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று காலை ஒன்பது மணி.
"காற்றுக்கென்ன வேலி......"
"மீரா!"
"கடலுக்கென்ன மூடி.... டிட்ன்க்டிடிங்....."
"மீரா"
"கங்கை வெள்ளம் சங்குக்குளே அடங்கி விடாது, மங்கை நெஞ்சம் பொங்கும் போது..."
"மங்கை நெஞ்சம் பொங்கறது இருக்கட்டும், பால் பொங்கிட போறது கவனி!"
"தெரியும்ப்பா, அடங்க மாட்டீங்க நீங்க? கொஞ்சமாவது பீல் பண்ணி பாட விடறீங்களா...!"
"ஸா..நி...ஸா..ஸரிஸரிஸரிஸரிஸாநி... ."
"தண்ணி கேன்காரர் வந்தா பணம் குடுத்திடு!"
"ஸா..நி...ஸா..ஸரிஸரிஸரி....சரிப்பா"
"மீரா"
"ஸ்ஸ்ஸ்....என்னப்பா வேணும் உங்களுக்கு?"
"இல்லப்பா நீ ஜலதோஷத்துலையும், ஜுரத்துலையும் கஷ்ட்டப்படரன்னு எங்க ஆபீஸ்ல டிரைவர்ரா இருக்கானே, அந்த நார்த் இந்தியன் பையன் அவன்கிட்ட சொன்னேன். அவன்தான் இந்த மருந்தை குடுத்தான். "இத மேடத்துக்கு குடுங்க சார், இன்னிக்கே நிவாரணம் கிடைச்சுடும்"ன்னு சொன்னான். ஆயுர்வேதிக்காம், ஒரு நாளைக்கு மூணு வேளை ஹாட் வாட்டர்ல கலந்து குடிக்கணுமாம்.இந்தா"
"சாரிப்பா!"
"எதுக்கு சாரி?"
"இல்ல எப்பவும் போல நீங்க நச்சரதுக்கு தான் கூப்படறேளோன்னு நினைச்சு, எரிஞ்சு விழுந்துட்டேன்."
"சீ..சீ...பரவாயில்லை, மறக்காம மருந்த சாப்பிடு."
காட்சி 2:
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று இரவு ஏழு மணி.
"மீரா.....மீரா!"
"ஏய் ! அம்மா எங்க ?"
கிச்சனுக்கு வந்து,"உடம்பு எப்படிப்பா இருக்கு? மருந்த சாப்பிட்டியா?"
"அடப்பாவி ! ஏதோ ஒரு மருந்தை குடுத்து குயில் மாதிரி இருந்த என் குரலை காக்கா மாதிரி ஆக்கிட்டேன்களே..!"
கத்தினேன், கதறினேன், என்ன புண்ணியம்? என் குரல் எனக்கே கேட்கவில்லை.
என் நிலையை பார்த்து முகம் முழுக்க பூரித்து, அட! அந்த மருந்தை குடுக்கும் போதே டிரைவர் சொன்னான், "இன்னிக்கி ஒரு நாள் இந்த மருந்தை மேடம் சாப்பிட்டால் போதும் சாப், உங்களுக்கு ஒரு வாரத்திற்கு அவங்க பாட்டுலருந்து நிவாரணம் கிடைக்கும்ன்னு, நிஜம் தான். நாளைக்கு அவனுக்கு சரவண பவன்ல லஞ்ச் ஸ்பொன்சர் பண்ணிட வேண்டியதுதான்."
"கிர்கிர்கிர்கிர்கிர்கிர்கிர். ......!"
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று காலை ஒன்பது மணி.
"காற்றுக்கென்ன வேலி......"
"மீரா!"
"கடலுக்கென்ன மூடி.... டிட்ன்க்டிடிங்....."
"மீரா"
"கங்கை வெள்ளம் சங்குக்குளே அடங்கி விடாது, மங்கை நெஞ்சம் பொங்கும் போது..."
"மங்கை நெஞ்சம் பொங்கறது இருக்கட்டும், பால் பொங்கிட போறது கவனி!"
"தெரியும்ப்பா, அடங்க மாட்டீங்க நீங்க? கொஞ்சமாவது பீல் பண்ணி பாட விடறீங்களா...!"
"ஸா..நி...ஸா..ஸரிஸரிஸரிஸரிஸாநி...
"தண்ணி கேன்காரர் வந்தா பணம் குடுத்திடு!"
"ஸா..நி...ஸா..ஸரிஸரிஸரி....சரிப்பா"
"மீரா"
"ஸ்ஸ்ஸ்....என்னப்பா வேணும் உங்களுக்கு?"
"இல்லப்பா நீ ஜலதோஷத்துலையும், ஜுரத்துலையும் கஷ்ட்டப்படரன்னு எங்க ஆபீஸ்ல டிரைவர்ரா இருக்கானே, அந்த நார்த் இந்தியன் பையன் அவன்கிட்ட சொன்னேன். அவன்தான் இந்த மருந்தை குடுத்தான். "இத மேடத்துக்கு குடுங்க சார், இன்னிக்கே நிவாரணம் கிடைச்சுடும்"ன்னு சொன்னான். ஆயுர்வேதிக்காம், ஒரு நாளைக்கு மூணு வேளை ஹாட் வாட்டர்ல கலந்து குடிக்கணுமாம்.இந்தா"
"சாரிப்பா!"
"எதுக்கு சாரி?"
"இல்ல எப்பவும் போல நீங்க நச்சரதுக்கு தான் கூப்படறேளோன்னு நினைச்சு, எரிஞ்சு விழுந்துட்டேன்."
"சீ..சீ...பரவாயில்லை, மறக்காம மருந்த சாப்பிடு."
காட்சி 2:
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று இரவு ஏழு மணி.
"மீரா.....மீரா!"
"ஏய் ! அம்மா எங்க ?"
கிச்சனுக்கு வந்து,"உடம்பு எப்படிப்பா இருக்கு? மருந்த சாப்பிட்டியா?"
"அடப்பாவி ! ஏதோ ஒரு மருந்தை குடுத்து குயில் மாதிரி இருந்த என் குரலை காக்கா மாதிரி ஆக்கிட்டேன்களே..!"
கத்தினேன், கதறினேன், என்ன புண்ணியம்? என் குரல் எனக்கே கேட்கவில்லை.
என் நிலையை பார்த்து முகம் முழுக்க பூரித்து, அட! அந்த மருந்தை குடுக்கும் போதே டிரைவர் சொன்னான், "இன்னிக்கி ஒரு நாள் இந்த மருந்தை மேடம் சாப்பிட்டால் போதும் சாப், உங்களுக்கு ஒரு வாரத்திற்கு அவங்க பாட்டுலருந்து நிவாரணம் கிடைக்கும்ன்னு, நிஜம் தான். நாளைக்கு அவனுக்கு சரவண பவன்ல லஞ்ச் ஸ்பொன்சர் பண்ணிட வேண்டியதுதான்."
"கிர்கிர்கிர்கிர்கிர்கிர்கிர்.