வியாழன், அக்டோபர் 24, 2013

வோய் திஸ் மச் நாய்ஸ் கேர்ள்ஸ்...!?

இன்னிக்கு இதுங்களை ஸ்கூல்க்கு கொண்டுவிடும் பணி என்னிடம் வந்துவிட்டது. மாடியில் இருந்து இறங்கும்போதே கிழே காத்திருந்தது அது. "ஹாய் வோயட்டி !" என்றபடியே இறங்கினார்கள். அதுவும் இவர்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி வால் வாசல் கதவில் "டப், டப் " என்று அடித்து சத்தம் கேட்கும் படி வேகமாக ஆட்டியது.

"அக்காவோடல்லாம் ஸ்கூல்லுக்கு வரியாடா ?"

"ரொம்ப முக்கியம் நாய்க்கு படிப்பு." (மனதிற்குள் நொந்து கொண்டேன்.)

ொஞ்ச ஆரம்பித்தார்கள். அதுவும் தன் பெரிய உடம்பை ஆட்டி விளையாடியது. வெள்ளையாய்,பெரிசாய் இருப்பதால் "ஐராவதம்" என்று பேர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

"சரி,சரி, வாங்கோ, டைம் ஆச்சு !"

வீட்டு கேட்டை தாண்டினோம். வெள்ளையும்,பழுப்புமாய் ஒன்று தெருவில் வந்து கொண்டிருந்தது.

"அம்மா ! இது எங்க பிரெண்டும்மா !"

"அது சரி, வோயட்டி தம்பி, இது பிரெண்ட்டா?" (மனசுக்குள்ளயே)

அடுத்து அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

"போடி என்ன இருந்தாலும் "குட்டு (goodu)" தான் ரொம்ப சமத்து என்மேல ரெண்டு காலையும் போட்டுண்டு எப்படி ஏறி நிப்பான் தெரியுமா?"

"இல்ல "மிஸ்க்கு (mishkku)" தான் சமத்து நம்ம பர்மிஷன் இல்லாம நக்கவே நக்காது."

"goodu, புசு,புசு ன்னு சிங்க குட்டி மாதிரி இருக்கான் பார்த்தியா."

"ஏன் mishkku வும் தான்."

ரெண்டும் தெரு முனையில் இருக்கும் வீட்டில் இருக்கும் ரெண்டு கோல்டன் ரெட்ரிவர் வகை நாய்கள்.

"ரெக்ஸ் அன்னிக்கு என்ன பார்த்து எப்படி வாலாட்டினான் தெரியுமாம்மா!?"

"எனக்கிட்ட வாலாட்டி இருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் அதுக்கு." (கறுவிக்கொண்டேன், இதுவும் மனசுக்குள்ளயே தான்)

தெருமுனை தாண்டினோம். ஒரு வீட்டில் இருந்து "குக்வக்,குக்வக்" என்று ஒரு பொமரேனியன் செல்லமாக கத்தியது.

"அம்மா, அதுதாம்மா "லக்கி" ரொம்ப சமத்து எங்க பிரெண்ட்."

அடுத்ததாக எதாவது ஒரு பக்கியை அறிமுகபடுத்துவார்களோ என்று பயமாக இருந்தது.

ஒருவழியாய் ஸ்கூலில் விட்டு விட்டு வந்து தலைவரிடம் கேட்டேன் "ஏம்ப்பா, நம்ம பொண்ணுங்களுக்கு யாரும் மனுஷ பிரெண்ட்ஸ்யே இல்லியோ...!?"

புதன், அக்டோபர் 23, 2013

வைகுண்ட வாசம்

 "வைகுண்ட வாசம்", யாருக்கு கிடைக்கும்? யாரு நிறைய புண்ணியம் பண்ணி இருக்காளோ அவாளுக்குத்தான் கிடைக்கும்ன்னு சொல்லுவா. வைகுண்டத்துக்கு போனவாளுக்கு மறு பிறவியே கிடையாதாம். பகவானோடையே வைகுண்டதுலையே இருப்பாளாம்.ஆனா, வைகுண்டத்துல ஆறுமாசம் வாழ்ந்துட்டு திரும்பி நரகத்துக்கு வந்தவர்களை  பற்றி நீங்க கேள்வி பட்டிருக்கிறீர்களா...? நாந்தான் அது (ஐய்....! சுத்தமா மர கழண்டுடுத்து போலிருக்கே !).

"முன்னம் அவன் நாமம் கேட்டாள்" ன்னு ஆரம்பிக்கற "சிவகாமியின் சபதம்" நாவலோட ஹை லைட் அப்பர் தேவார பாடல்ல வருமே ஒரு எடத்துல "பின்னர் அவன் ஆரூர் கேட்டாள்" ன்னு. அந்த மாதிரி எனக்கு என்னவோ ஸ்ரீரங்கத்து மேல ரொம்ப ஈர்ப்பு. (ஓ...! உன்னபத்தி உனக்கு அப்படியெல்லாம் வேற ஒரு நினைப்பா..!)

திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் ன்ன உடனேயே தலைவர் கிட்ட ஸ்ரீரங்கத்துல வீடு பாருங்கோன்னு சொல்லிட்டேன். அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கும், சுத்தி இருக்கிறவா எப்படி இருப்பா, அங்க வீடு கிடைக்குமா, இப்படி எதை பத்தியுமே யோசிக்காம சொன்னேன். தலைவரும் அப்பல்லாம் "மனைவி சொல் மிக்க மந்திரமில்லை" ன்னு தான் இருந்தார். (கல்யாணமான புதுசு இல்லியா,அதான்...!) (நீ போன பின்னாடி அங்க இருக்கிறவா எப்படி இருந்தா?, ஓடி இருப்பாளே!)

 ஆனா பகவானும் நான் கொஞ்சகாலம் வைகுண்டதுல இருக்கணும்னு விதிச்சிருந்திருக்கார். ஸ்ரீரங்கத்துல, அம்மா மண்டபம் ரோட்ல, அம்மா மண்டபத்துக்கு கிட்டகையே ஒரு பிளாட்ல வீடு கிடைச்சுது. ஒரு நண்பர் சொல்லிவச்சு, நாங்க தான் வரணும்ன்னு நிறைய பிரயத்தனம் பண்ணி தான் அந்த வீடு கிடைச்சது. (நம்பிட்டோம் !)

நாங்க குடி போனது ஒரு ஆனி மாச கடைசி நாள். மறுநாளில் இருந்து ஆடி மாதமும்,அதோடே பண்டிகைகளும் தொடக்கம், ஆடி முதல் தை வரை எல்லா பண்டிகைகளையும் ஒரு தடவை கொண்டாடிட்டு திருப்பியும் இந்த சென்னை நரகத்துக்கே சாரி நகரத்துக்கே வந்தாச்சு. (நீ வந்த பின்னாடி தான் அது நரகமாகிட்டதா நிறையப்பேர் பேசிக்கறா..!)

தொடரும்...

பின் குறிப்பு : வாசகர்களுக்கு சிரமம் தரக்கூடாதென்பதர்க்காக அவர்களின் விமர்சனங்களும் அடைப்புகளுக்குள் முன்கூட்டியே தரப்பட்டிருக்கின்றன.


 

சனி, அக்டோபர் 05, 2013

MY FIRST GUEST FOR NAVARATHIRI

Long live Blogger ! Blogger editor is not providing  me with tamil fonts. So, with lots and lots of hesitation I am giving my first english post.  I am forced to write in English.  Here is the lady who comes to my home as the very first person in navarathiri every year. I am glad to inform you all that, this decoration I found all by myself. Many others may also have created this or ever much better than this. If so, kindly let me know through your comments. I can learn the other methods also.


May Matha Bhuvaneshwari shower her immense grace on all of us.


VILAKKU NACHIYAR