படித்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் என்னால் மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள் இங்கே. இவற்றை எங்கே,எப்போது படித்தேன் என்பது நினைவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------
மந்திரி : மன்னா ! இப்போது அந்தபுரத்திற்கு போகாதீர்கள், மகாராணியார் தங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார்.
மன்னர் : எப்படி சொல்கிறீர்கள் ?
மந்திரி : கையில் உள்ள கத்தியால் பழம் ஒன்றை நறுக்கி கொண்டே,"உன்னைத்தான் நான் அரிவேன், மன்னவனை யார் அரிவார்...?" என்று பாடிகொண்டிருக்கிறார் மகாராஜா !
-------------------------------------------------------------------------------------------------------------
பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :
டாக்டர் (பைத்தியத்திடம்) : என்ன எழுதற ?
பைத்தியம் : லெட்டர்.
டாக்டர் : யாருக்கு?
பைத்தியம் : எனக்கு தான்.
டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?
பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.
(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))
-------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் : அந்தாளை ஏன் எல்லோரும் சேர்ந்து அடிக்கிறாங்க ?
மற்றொருவர் : ஜோதிடர்கள் மாநாட்டில் பாட கூப்பிட்டால்,
"நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று பாடி இருக்கிறார், பின்ன அடிக்கமாட்டங்களா !?
-------------------------------------------------------------------------------------------------------------
மருமகள் : நான் என் குழந்தைகளுக்கு எல்லா சாப்பாடும் நான் ஸ்டிக்ல்ல தான் செஞ்சு தரேன்.
மாமியார் : அதான் உன் குழந்தைகள் யாரோடும் ஒட்டவே மாட்டேன்கறதுகளா !?
------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
மந்திரி : மன்னா ! இப்போது அந்தபுரத்திற்கு போகாதீர்கள், மகாராணியார் தங்கள் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார்.
மன்னர் : எப்படி சொல்கிறீர்கள் ?
மந்திரி : கையில் உள்ள கத்தியால் பழம் ஒன்றை நறுக்கி கொண்டே,"உன்னைத்தான் நான் அரிவேன், மன்னவனை யார் அரிவார்...?" என்று பாடிகொண்டிருக்கிறார் மகாராஜா !
-------------------------------------------------------------------------------------------------------------
பைத்தியக்கார ஆஸ்புத்திரியில் :
டாக்டர் (பைத்தியத்திடம்) : என்ன எழுதற ?
பைத்தியம் : லெட்டர்.
டாக்டர் : யாருக்கு?
பைத்தியம் : எனக்கு தான்.
டாக்டர் : அப்படியா ! அதுல என்ன எழுதி இருக்கு ?
பைத்தியம் : அதெப்படி டாக்டர் இப்போ எனக்கு தெரியும், நாளைக்கு போஸ்ட் மென் வந்து லெட்டர் குடுத்து அதை படிச்சு பார்த்தா தானே தெரியும்.
(நானே பதிவெழுதி, நானே படித்து கொள்ளும் போது எனக்கு நினைவுக்கு வரும் ஜோக் இது.) :)))
-------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் : அந்தாளை ஏன் எல்லோரும் சேர்ந்து அடிக்கிறாங்க ?
மற்றொருவர் : ஜோதிடர்கள் மாநாட்டில் பாட கூப்பிட்டால்,
"நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்." என்று பாடி இருக்கிறார், பின்ன அடிக்கமாட்டங்களா !?
-------------------------------------------------------------------------------------------------------------
மருமகள் : நான் என் குழந்தைகளுக்கு எல்லா சாப்பாடும் நான் ஸ்டிக்ல்ல தான் செஞ்சு தரேன்.
மாமியார் : அதான் உன் குழந்தைகள் யாரோடும் ஒட்டவே மாட்டேன்கறதுகளா !?
------------------------------------------------------------------------------------------------------------------
3 கருத்துகள்:
ஹா... ஹா... ரொம்ப சந்தோசமுங்க...!!!
sema comedies....
@ dindugu danabalan : nandri saar !
@ puspha : Nandri push!
கருத்துரையிடுக