வெள்ளி, ஜூலை 29, 2011

முதல் கொடுமை



நான் முதல் முதலில் எழுதிய பதிவு இது. இதை படித்து விட்டு என் சகோதரிகள் என்னை ப்ளாக் எழுத தூண்டினார்கள். அதன் விளைவு தான் நீங்கள் இப்போது அனுபவித்து கொண்டிருக்கும் கொடுமைகள்.

தி ஹிந்து நாளிதழும் அவதார் ஐ வின் என்ற மனித வள மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு விழா வை19.03.2011, சனிகிழமை கீழ்பாக்கத்தில்  நடத்தின. 
நிகழ்ச்சியின் சில காட்சிகள் உங்களுக்காக. 


ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பதிவு செய்தவர்கள் ஆயிர கணக்கில் இருகிறார்கள் என்றதும் அதற்கேற்றவாறு ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும். ஆனால் விழா ஏற்பாடுகள் மிக மிக மோசம்.

1.  பதிவு சீட்டை யாரும் சரி பார்க்கவே இல்லை. ஆயிரகணக்கான பெண்கள் வந்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

2.  அந்த சிறு அரங்கில் எல்லோரும் முண்டியடித்து கொண்டு திணறியது பரிதாபம். அசம்பாவிதம் ஏதும் நிகழாதது விழா ஒருங்கினைபாளர்களின் அதிர்ஷ்டம். 

3. பல பெண்களுக்கு பெற்றோர்உடன் பிறந்தோர்தோழிகள்கணவன் ஆகியோர் உடன் வந்திருந்தார்கள்.
     சில பெண்களுக்கு அவர்களது ஆண் நண்பர்கள் உடன் வந்து வரிசையில் நிற்கும் போது கடலை போட்டு உற்சாக மூட்டினார்கள். சிலர் குடை பிடித்து கொண்டு கூடவே நடந்து வந்தார்கள். 

4. தற்சமயம் நகர்புற பெண்களிடம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து விட்டது. தர்புசனி இளநிர் போன்ற இயற்கை உணவு வகைகள் மிகுதியாக விற்பனை ஆயின.

5. No BE, B.TECH, MCA  என்று ஒரு கம்பெனி முகாம் வாசலில் கூவி கொண்டிருந்தார்கள். 

6. தலை நரைத்த மூதாட்டிகள் கூட பெங்களூர் ஆ நான் போகிறேன் என் பிள்ளை அங்கே இருக்கிறான்மும்பையா பரவா இல்லை என் தம்பி இருக்கிறான் என்று எந்த ஊருக்கும் போய் வேலை பார்க்கும் உற்சாக தோடு இருந்ததை பார்த்தால் உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் பெண்கள் தான் என்பது புரியும்.

அதெல்லாம்  சரி உனக்கு வேலை கிடைத்ததாஎன்கிறீர் களாஹி... ஹி ...ஹி  உங்களுக்கு நல்ல கட்டுரை கிடைத்ததல்லவா?


கருத்துகள் இல்லை: